கரூர், செப்.30- தேசியக் கல்விக் கொள்கை- 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் முன் னிலை வகித்தார். துணைப் பொதுச்செய லாளர் தா.கணேசன் வரவேற்புரை யாற்றினர். பிரச்சாரப் பயணத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் ச.மயில் பேசினார். கூட்டத்தில் கல்வியாளர் பேராசிரியர் அருணன் தனது சிறப்புரையில், மாணவர் சமுதாயத்திற்காக மகத்தான விழிப்புணர்வு யாத்திரையை நடத்தி மாணவ சமுதா யத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்தமான தமிழ்ச் சமுதாயத்துக்காகவும் மகத்தான இயக்கத்தை முன்னெடுத்து உள்ளீர்கள். தற்போது கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது அதுவும் தேசிய கல்விக் கொள்கை வரைவு எனும் அடிப்படையில் ஆபத்து ஏற் பட்டுள்ளது. பொதுவாக கல்விக் கொள்கை என்றால் கல்வியை பரப்புகின்ற புதிய ஏற் பாடாக இருக்கும். ஆனால் தேசிய கல்விக் கொள்கை 2019 என்பது இருக்கின்ற கல்வி யை பறிக்கும் சதி வேலை. கல்விக் கொள்கை என்றால் இதுவரை கிடைக்காத அவர் களுக்கும் கிடைக்கக் கூடிய கல்விக் கொள்கையாக இருந்தது. தற்போது கொண்டு வந்துள்ள கல்வி வரைவு அறிக்கை இருப்பதையும் பறிக்கும் வேலை முழு அறிக்கையையும் படித்தவன் என்ற முறையில் கூறுகிறேன். தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு கல்வி கற்கின்ற பிள்ளைகளே பயமுறுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு கல்விச் சுமை, தேர்வுச் சுமை, தொலை தூரத் சுமை என மூன்று சுமைகள் பிள்ளை களை அச்சுறுத்துகின்றன. இதனை முற்றி லுமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், பொதுமக்கள் வலுவான முறையில் தங்களது எதிர்ப்புக் குரலை தெரிவித்திட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.