tamilnadu

img

குளித்தலை பேருந்து நிலையத்தில் இரவில் பேருந்துகள் நின்றுச் செல்லக் கோரிக்கை

 குளித்தலை, செப்.29- கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் இரவில் பேருந்துகள் நிற்க கோரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் அளித்த மனுவில், குளித்தலை நகராட்சி திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் அருகிலுள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்வதற்கு முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளது. தினசரி பகல் நேரத்தில் அனைத்து பேருந்துகளும் குறித்த நேரத்தில் பேருந்து நிலையம் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றனர்.  ஆனால் இரவு நேரத்தில் திருச்சி கரூர் கோவை திருப்பூர் போன்ற இடங்களில் குளித்தலை வரும் பயணிகளை பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என கடும் பாதிப்பு அடைகின்றனர். இதுகுறித்து பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக 24 மணி நேரமும் அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி விட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.