tamilnadu

img

ரோஜா மரணத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தடையை மீறி சிபிஎம் பேராட்டம்

காஞ்சிபுரம், டிச.10- காஞ்சிபுரம் மாவட்டம், ஆண்டி சிறுவள்ளூர் கிரா மத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட  தலித் இளம்பெண் ரோஜாவின் இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும்,  குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டி த்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் செவ்வாய்கிழமை (டிச.9) தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  வட்டச் செயலாளர் இ.லா ரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  இ.முத்துக்குமார், கே.வாசு தேவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். சவுந்தரி, எம்.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, நகரச் செயலாளர் சி.சங்கர், நகரக்குழு உறுப்பினர்கள் கே.ஜீவா, இ.சங்கர், வட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.வசந்தா, காளத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.  இதுகுறித்து மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கூறுகையில், ‘3 நாட்களுக்கு முன்பே அனுமதி கடிதம் கொடுத்தும்,  அனுமதி வழங்காமல் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ரோஜாவின் மரணத்திற்கு  உடந்தையான குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்க ப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என்றார்.