tamilnadu

img

சாத்தான்குளம் சம்பவம் சிறையில் அடைக்கப்பட்ட போலீசாரிடம் அடுத்த வாரம் விசாரணை

சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்

தூத்துக்குடி, ஜூலை 4- வணிகர்களான தந்தை-மகனை கொடூ ரமாக தாக்கிக் கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீசாரி டம் அடுத்த வாரம் காவலில் எடுத்து விசா ரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணி கர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென் னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் கொல்லப்பட்ட னர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்த விசாரணையின்படி வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்  ஸ்ரீதர், உதவி ஆய்வா ளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலை மைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.  அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதில் சிபிசிஐடியினரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட காவலர் முத்து ராஜை வெள்ளியன்று இரவு  விளாத்திகுளம் அருகே பூசனூர் என்ற பகுதியில் கைது செய்தனர்.

சனிக்கிழமையன்று காலை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். இதையடுத்து, முத்துராஜை ஜூலை 17 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறை யில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இந்நிலையில் சனிக்கிழமையன்று சிபி சிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் கூறு கையில்,  சாத்தான்குளம்  சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தடயங்கள், ஆவணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். சிறையில் அடைக் கப்பட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். 

பொதுமக்களிடம் விசாரிக்க முடிவு

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபி சிஐடி முடிவு செய்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள், உறவி னர்களை குறுஞ்செய்தி மூலம் அழைத்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசா ரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.  இதற்கிடையே, பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பி னரிடம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை யன்றும் விசாரணை நடைபெற்றது.