tamilnadu

img

கரும்பு விவசாயிகளின் பாக்கியை பெற்றுத் தருக!

சென்னை, ஜூலை 3- தனியார், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை கள் வழங்க வேண்டிய 406.17 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தர ஆவண செய்யுமாறு திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயல கத்தில் சந்தித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், தலைவர் என்.பழனிச்சாமி, பொருளாளர் எம்.சின்னப்பா ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கும், அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து நிறைவேற்றுவதிலும் தங்களின் மேலான பங்களிப்புக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கரும்பு விவசாயி கள் சந்திக்கும் பிரச்சனை களில் இருந்து அவர்களை பாது காத்திட கீழ்கண்ட கோரிக்கை களை நிறைவேற்றித் தர ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மாநிலத்தில் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசின் பரிந்துரை விலையில் (எப்ஆர்பி) பெரும் தொகையை  பாக்கியாக வைத்துள்ளனர். எப்ஆர்பி விலையை சர்க்கரை ஆலைகள் சட்டப்படி 14 நாட்க ளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்பது கரும்பு கட்டுப்பாடு உத்தரவு 1966 ஆகும். ஆனால் தமிழ்நாட்டில் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு அரவை முடிந்து 6 மாதங்களாகியும் ரூ. 280.96 கோடியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூ. 125.20 கோடி யும் மொத்தத்தில் ரூ. 406.17 கோடி எப்ஆர்பி பாக்கி உள்ளது.  மேற்படி கரும்பு பண பாக்கியை வட்டியுடன் விவசாயி களுக்கு பெற்றுத்தர ஆவன செய்திடுமாறு கேட்டுக் கொள்கி றோம்.

கடலூர் மாவட்டம் பெண்ணா டத்தில் உள்ள ஸ்ரீஅம்பிகா, ஏ. சித்தூரில் உள்ள திரு.ஆருரான் சர்க்கரை ஆலைகளும், அதே போல தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டகுடியில் உள்ள திரு ஆரூரான், துகிளியில் உள்ள ஸ்ரீஅம்பிகா தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் 2015 - 16இல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் 400 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று எடுத்துக் கொண்டு மோசடி செய்துள்ளனர். வங்கி  நிர்வாகம் தற்போது கடனை வட்டியுடன் கட்டுமாறு விவசாயி களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வருகின்ற னர். வங்கியில் விவசாயிகள் பெயரில் கடன் இருப்பதால் அவர்களின் அவசரத் தேவை களுக்கு புதிய கடன் வாங்க முடியவில்லை. இதனால் விவ சாயிகள் பெரும் சிரமத்திற்கும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலைகள் வாங்கியுள்ள கடன் தொகையை ஸ்ரீஅம்பிகா, திரு ஆரூரான் சர்க்கரை ஆலை களின் பெயரில் மாற்றி விவசாயி களை கடன் சிக்கலில் இருந்து மீட்டிட வேண்டுகிறோம்.

2018 - 19 பருவத்தில் அரைத்த  கரும்புக்கு ஒரு டன்னுக்கு 9.5 பிழி திறனுக்கு ரூ. 2612.50 மத்திய அரசு எப்ஆர்பி விலையாக அறி வித்தது. இது கடந்த ஆண்டு விவசாயிகள் பெற்ற விலையை விட குறைவாகும். மாநில அரசு  ஒரு டன் கரும்புக்கு ரூ. 137.50  கூடுதல் விலை தருவதாக அறி வித்துள்ளதை ரூ. 200 ஆக உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்கிட ஆவண செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 2011 -  12இல் 216 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப் பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 2018 - 19இல் 8 லட்சம் டன்களாக சர்க்கரை உற்பத்தி குறைந்துவிட்டது. இது குறித்து ஆய்வு செய்து தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலன் களை பாதுகாத்திட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.