tamilnadu

img

சங்கரன்கோவிலில் மக்கள் ஒற்றுமை கலை விழா

திருநெல்வேலி, அக்.6- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக் கள் ஒற்றுமை கலைவிழா நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் நடைபெற்றது. விழாவிற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.உச்சிமாகாளி தலைமை தாங்கினார். வாலிபர் சங்க வட்டாரச் செயலாளர் கருப்பசாமி வர வேற்றுப் பேசினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சத்தியா முன் னிலை வகித்தார். கலை விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ வுமான கே.பாலபாரதி துவக்கி வைத் தார். விழாவில் ஒற்றுமையே நமது மரபு என்ற தலைப்பில் வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜிஸ்குமார் பேசினார்.

விழாவில் வையாபுரி மருத்துவ மனை மருத்துவர் சுப்புராஜ் ,மலை வேல் தொண்டு நிறுவனத்தின் சித்த மருத்துவர் கணபதி ,அரசு மருத்துவர் சந்திரசேகர், துணை வட்டாட்சியர் புஷ்பராணி, ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட விவசாய சங்க செயலாளர் ஜெயராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர் சுப்பி ரமணியன், சிவகிரி துணை வட்டாட்சி யர் மைதீன் பட்டாணி, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட துணை செயலாளர் உ.முத்துப்பாண்டியன் ,முன்னாள் மாவட்ட செயலாளர் அசோக்ராஜ் ஆகி யோரை மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி கௌரவித்து. நினைவு பரிசுகளை வழங்கினார். கலை விழாவில் புதுகை பூபாலத்தின் நையாண்டி தர்பார், ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமிய கலை குழு வின் ஆட்டக்கலை மற்றும் திருவுடை யான் கலைக்குழுவின் கிராமிய பாடல்கள் கவிதை வாசிப்பு உட்பட கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. விழாவில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராஜகுரு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க வட்டார தலைவர் தமிழரசன் நன்றி கூறினார்.