tamilnadu

img

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு நடப்பு ஆண்டே அமலாக்குக!

வாலிபர் - மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 17- மருத்துவப் படிப்பில் ஓபிசி மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் தமிழகத்தில் உள்ள இட  ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்; இதற்கு மூவர் குழுவை அமைத்து மூன்று மாதத்தில் பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என  உயர்நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பளித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலேயே ஓபிசி மாணவர் களுக்கான இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்வியில் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மதுரையில் நடைபெற்ற போராட்டத் திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வேல்தேவா தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா, நிர்வாகிகள் கோபிநாத், செல்வா, பாவெல் , மாணவர் சங்கத் தலைவர் கள் பிருந்தா, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார்,  மாணவர் சங்க  மாவட்டத் தலைவர் பதில்சிங்,மாவட்டச் செயலாளர் எட்வின் பிரைட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத் தில் மாணவர் சங்க மாநிலச் செயலாளர்  வீ.மாரியப்பன், வீனிஷா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சசி, மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும், சென்னையில் சாஸ்திரிபவன் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலப்பொருளாளர் தீபா, நிர்வாகி கள் கார்த்தீஷ் , மஞ்சுளா, சரவணத் தமிழன், சுரேஷ், இசக்கி நாகராஜ் (மாநில துணை செயலாளர்) ஜான்சி ராணி(மத்தியக்குழு உறுப்பினர்), சந்துரு, பிரசாந்த், சுபாஷ், விக்னேஷ், மிருதுளா (மாநிலக் குழு உறுப்பினர் கள்), திண்டுக்கல் ஒன்றியம் ரெண்ட லப்பாறையில் நடைபெற்ற போராட்டத் தில்  வாலிபர் சங்க மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிருபன் பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் நிருபன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.