tamilnadu

போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வேண்டும்

போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகளுக்கு  தீர்வுகாண வேண்டும்

தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநிலக்குழு வலியுறுத்தல்!

சென்னை, செப். 19 - ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திரு ப்புப் போராட்டம் நடத்தி வரும், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றோரின் கோரிக்கைகளுக்கு, தமிழக அரசு  உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் செப்டம்பர் 18, 19 தேதிகளில் கோவில்பட்டியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் குறித்து நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வுக் கால பலன்கள் வழங்கப்படுவ தில்லை. இப்போதைய நிலையில் 16  மாத ஓய்வுக்கால பலன்கள் நிலுவை யில் உள்ளன. அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றில் பல்வேறு பிரச்சனை உள்ளது. ரூ. 15,000 கோடியை எடுத்துக் கொண்ட நிர்வாகம் பணிக் காலத்தில் தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிப் பணம் உரிய கணக்குகளில் செலுத்தப்படுவ தில்லை. பணிக்கொடை டிரஸ்ட்டுக்கும் பணம் செலுத்தப்படுவதில்லை. தொழி லாளர்களுக்கும் பல்வேறு நிலுவைகள் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் 15,000 கோடி ரூபாய் அளவிற்கான தொழி லாளர்களின் பணம், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தால் செலவு செய்யப் பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்ப தற்கு இதுவே அடிப்படை காரணமாகும். கணக்கில் செலுத்தப்படாத பி.எப். பணம் 01.04.2003-க்குப் பின் பணிகளில் சேர்ந்த ஊழியர்களுக்கு, பழைய  ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப் படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அது நிறைவேற்றப்படவில்லை. எனவே, போக்குவரத்து ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பலன் களை வழங்க வேண்டும், தொழி லாளர்கள் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஒப்பந்த நிலு வைத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 18.08.2025 முதல் சிஐடியு சார்பில் 22 மையங்களில் தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் பேச்சு நடத்தியும் 20 நாளாக தீர்வில்லை! கடந்த 01.09.2025 அன்று சிஐடியு தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பேசினார். அப்போது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப் பயன்களை தீபாவளிக்கு முன்பாக வழங்க அரசு முன்வர வேண்டும், தொழி லாளர்களின் ஒப்பந்த நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து வது குறித்து, தொழிற்சங்கங்களோடு அரசு விவாதிக்க வேண்டும், தொழிலா ளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப் பட வேண்டும் என தொழிற்சங்க தலை வர்கள் வலியுறுத்தினர்.  தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக் கைகளை நிறைவேற்ற நிதித்துறை யுடன் பேசிவிட்டு தெரிவிப்பதாக அமைச் சர் கூறினார். ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை மாநி லக்குழு சுட்டிக்காட்டுகிறது.  கோரிக்கைகளை வலியுறுத்தி 32  நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது எனவே, போக்குவரத்துத் தொழிலா ளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.