கோவையில் மூளையழற்சி நோயால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த ரம்யா திருச்சி சாலையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரம்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குறையாததால் ஜூன் 15ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மூளைக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.