திருப்பூர், ஜூலை 8 – குவைத் நாட்டில் சிக்கியுள்ள இரு பெண்களை மீட்டுத்தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் குவைத்தில் கொத்தடிமைகளாக சிக் கியுள்ள பெண்களை மீட்டுத்தரக் கோரி ஊத்துக்குளியைச் சேர்ந்த எம்.திருமூர்த்தி (42), கே.செல்வம் (41) ஆகி யோர் மனு அளித்துள்ளனர். ஊத்துக்குளி பகுதியில் குடியி ருந்து வரும் திருமூர்த்தி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்க ளுக்கு அருகில் வசித்து வருபவர் செல்வத்தின் மனைவி வசந்தாமணி. இந்நிலையில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இவர் களை அணுகி, குவைத் நாட்டில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்துக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாக இதை உண்மை என்று நம்பி கடவுச் சீட்டு, விசா எடுத்து ராஜேஸ்வரியை கடந்த மே 2 ஆம் தேதி விமானம் மூல மாக குவைத் நாட்டுக்கு திருமூர்த்தி அனுப்பி வைத்தார். விமானம் ஏறும்போது மாதம் ரூ.22,500 தான் ஊதியமாகத் தருவார்கள் என்று செல்வராஜ் தெரிவித்துள்ளார். இத னால் ராஜேஸ்வரியம், அவரது தந்தையும் அங்கு செல்ல மறுத்துள்ள னர். விசா எடுத்துவிட்டதால் அங்கு செல்லவில்லை என்றால் ரூ.85 ஆயிரம் தர வேண்டும், இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறியதால் வேறு வழியில்லாமல் அவர்கள் அங்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களைத் தொடர்ந்து, செல்வத்தின் மனைவி வசந்தாமணியும் மே 22 ஆம் தேதி குவைத் சென்றார். அங்கு ராஜேஸ்வரியிடம் காலை முதல் இரவு 1 மணி வரையில் வேலை வாங்கிவிட்டு, ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து கொத்தடிமையாக நடத்துவதாக கணவருக்கு தொலை பேசி மூலம் தகவல் தெரிவித்துள் ளார். மேலும் அவரது கையை உடைத்துவிட்டதாகவும் தெரிவித் திருக்கிறார். இதேபோல், வசந்தாமணியையும் கொடுமைப்படுத்துவதாக அவர் கணவர் செல்வத்துக்கு தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்து செல்வராஜை விசாரித்தபோது கள்ளக்குறிச்சியில் தனியார் டிரா வல்ஸ் ஏஜென்சி மூலமாக அனுப்பி வைத்தது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டபோது ராஜேஸ்வரி, வசந்தா மணி ஆகியோரை திருப்பி அழைத்து வரவேண்டும் என்றால் தலா ரூ.1.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். ஆகவே, உரிய விசா ரணை நடத்தி குவைத் நாட்டில் கொத்தடிமைகளாக சிக்கியுள்ளவர் களை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.