tamilnadu

img

மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்களை அரசு நடத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை

மே.பாளையம், ஜூலை 29- மது விலக்கு அமலில் உள்ள கேரளப் பகுதிக்கு தமிழகத்திலி ருந்து மது கடத்தப்படுவதைத் தடுக்க கேரள காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள் ளனர். தமிழக, கேரள எல்லையான கேரளாவுக்குட்பட்ட அட்டப்பாடி சோலையூர், அகளி, கோட்டத் துறை உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் பெருமள வில் வசித்து வருகின்றனர். இவர்க ளில் பலர் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதித்து இளம் வயதி லேயே மரணமடைந்தனர். இத னால் இங்குள்ள மலைக்கிராமங் களில் விதவை பெண்களின் எண் ணிக்கை அதிகரித்தது. குழந்தை கள் பலவும் போதிய ஊட்டச் சத் தின்றி இறந்து போயின. இதனை யடுத்து கேரள அரசு நடத்திய ஆய்வில் பழங்குடியின மக்களின் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிக ரிக்க மதுவே காரணம் என்பதை கண்டறிந்து மலைவாழ் மக்கள் வசிக்கும் அட்டப்பாடி சுற்றுவட் டார பகுதிகள் முழுமையாக மதுவி லக்கை அமுலுக்கு கொண்டு வந் தது.  

இந்நிலையில், கேரள எல்லை யில்  தமிழகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி என்னுமிடத்தில் டாஸ் மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனையடுத்து தடை செய்யப் பட்ட பகுதிகளில் உள்ள மலை வாழ் மக்கள் பலரும் ஆனைகட் டிக்கு வந்து மது அருந்தி சென்ற னர். இதனால் மதுவால் இறப்போ ரின் எண்ணிக்கை தொடர்ந்தது.  இதனால் பாதிக்கப்பட்ட பழங் குடியின பெண்கள் ஒன்று திரண்டு இரு மாநில எல்லையோர நுழைவு வாயிலான கேரளாவிற்கு உட்பட்ட அட்டப்பாடி என்னுமிடத்தில் சாலையோரம் தங்கி “உசிரு போராட்டம்” என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். சாலை யோரம் பல நாட்கள் இரவு பக லாக தங்கி மதுவால் ஏற்படும் தீமை கள் குறித்து பாடியபடி, தமிழக அரசு ஆனைகட்டியில் உள்ள அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டத் தில் இறங்கினர். இதனால் பிரச்ச னையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசின் உத்திரவின் பேரில் ஆனைக்கட்டி டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது.  இதன் பின்னர் ஆனைக்கட்டி யில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜம்பு கண்டி என்னுமிடத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் மீண்டும் பழைய நிலையே உருவானது. இரவு நேரங்களில் வனம் சார்ந்த சாலையில் போதையில் செல்வ தால் யானை தாக்கியும், விபத் தில் சிக்கியும் உயிரிழப்பது அதிக ரித்தது. மதுவால் உடல்நலம் பாதிக் கப்பட்டு இறப்பது ஒருபுறமிருக்க, யானையாலும் வாகன விபத்தா லும் இறப்போரின் எண்ணிக்கை யும் கூடியது.  இந்நிலையில் கடந்த மாதம் இந்த மதுக்கடை பாரில் இருந்து போதையுடன் இருசக்கர வாக னத்தில் வந்த இருவர் மோதிய தில் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் என்பவரது மனைவி ஷோபனா பலியானார்.

இறந்து போன பெண்ணின் உடலை சாலையில் இருந்து எடுக்காமல் அவரது கணவர் மருத் துவர் ரமேஷ் தலைமையில் நூற் றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜம்புகண்டி மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து சம்பந் தப்பட்ட மதுக்கடை “தற்காலிக மாக” மூடப்பட்டது.  ஆனாலும் ஜம்புகண்டியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தடாகம் பகு தியில் இருந்து மது வாங்கப்பட்டு கேரளாவில் தடை செய்யப்பட் டுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதும், அவை கள்ளத் தனமாக மலைக்கிராமங்களில் விற்கப்படுவதும் தொடர்கிறது. இதனைத் தடுக்க கேரள காவல் துறை களத்தில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா விற்குள் நுழையும் சாலையில் புதிய சோதனை சாவடி அமைத் துள்ளது.

இங்கு “தமிழ்நாட்டு மதுவை கேரளாவிற்குள் எடுத்து வருவது குற்றமாகும்” என தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத் தில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.  இது குறித்து பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் கூறும் போது, கேரள அரசைப் போலவே தமிழக அரசும் பழங்குடி யினர் அதிகம் வசிக்கும் கேரள எல் லையோர தமிழக பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந் தர தீர்வு காண முடியும் என்கின்ற னர். மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின ஊர் மூப்பன்கள் என்றழைக்கபடும் கிராமபெரிய வர்கள் கூறுகையில், மதுவிற்கு அடிமையானவர்கள் எத்தனை தொலைவில் இருந்தாலும் செல வழித்து மதுக்கடைக்கு செல் வதாகவும், இதனைத் தடுக்க மலை கிராமங்களில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்களை அரசு முன்வந்து நடத்த வேண்டும், என கோரிக்கை விடுக்கின்றனர்.