tamilnadu

img

மேட்டுப்பாளையம் அருகே தலித் பெண்னை காதலித்ததற்காக

மேட்டுப்பாளையம், ஜுன் 27- மேட்டுப்பாளையத்தில் தலித்  சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த தனது சகோதரனையே வெட்டி கொன்று விட்டு தப்பி யோடிய வினோத் வியாழனன்று சரணடைந்த நிலையில் காவல் துறையினர் கைது செய்து சிறை யிலடைத்தனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள வெள்ளிப் பாளையம் சிரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன்கள் வினோத் மற்றும் கனகராஜ். கலாசு மண்டி தொழிலாளியான கனகராஜ் அதே பகுதியில் வசிக்கும் தர்ஷினி ப்ரியா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு, வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தம்பியின் காதலுக்கு அண்ணன் வினோத் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சாதியை காரணம் காட்டி எழுந்த மோதலால் தம்பி கனகராஜ் வீட்டை விட்டு வெளியேறி விட் டார்.

 இந்நிலையில் ஆத்திரமடைந்த வினோத் செவ்வாயன்று கனக ராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனை தடுக்க  முயன்ற அவரது காதலி தர்ஷினி ப்ரியாவும் வெட்டப்பட்டு படுகாய மடைந்தார். இவர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்னை காதலித்தற்காக நிகழ்த் தப்பட்ட  கொலை சம்பவம் தமிழ கம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கிடையே, இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோ டிய வினோத்தை காவல்துறையி னர் தேடி வந்த நிலையில் வியா ழனன்று காலை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந் தார். இதன் பின்னர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கொலை சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அரு கில் உள்ள வீடுகளிலிருந்தவர்க ளிடம் விசாரித்து நடந்த சம்பவம் பற்றி ஆய்வு நடத்தினர்.  மேலும், கொலை நடைபெற்ற போது வினோத்துடன் வேறு யாரேனும் இருந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் சரணடைந்த வினோத் மீது கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வினோத்தை கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதன்பின்னர் நீதி மன்ற உத்திரவின்படி கோவை மத்திய சிறையில் வினோத்தை அடைத்தனர்.