tamilnadu

img

ஆட்டோக்களை இயக்க அனுமதித்திட பெண் ஓட்டுநர்கள் கோரிக்கை

மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

கோவை, மே 20- ஆட்டோக்களை இயக்க அரசு அனு மதி வழங்காததால் வாழ்வாதாரம் முழுமை யாக பாதிக்கப்பட்டு வறுமையில் தவிப்ப தாக பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித் துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், பல்வேறு தொழில்களுக்கு தளர்வுகள் வழங் கப்பட்டு வருகின்றது. ஆனால், ஆட்டோ, டாக்சிகள் இயக்க இன்னும் அனுமதி வழங் கப்படவில்லை. 55 நாட்களாக தொழிலை  செய்ய முடியாததால் ஆட்டோ ஓட்டு நர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆட்டோக் களை இயக்க அனுமதி வழங்கக்கோரி பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “குடும்பத்தை மொத்தமாக சுமக்கும் சூழலில்  தான் இந்த ஆட்டோ தொழிலுக்கு வந்தோம்.  ஆட்டோ ஓட்டும் பல பெண்களுக்கு கண வர் இல்லை. வறுமையை சமாளிக்க ஆட்டோ ஓட்டி வந்த சூழலில், தற் போது தொழிலை நடத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டோக் களை இயக்க அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.