tamilnadu

உணவகங்களை முழுமையாக செயல்பட அனுமதித்திடுக சிஐடியு ஹோட்டல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

கோவை, மே 26 –  உணவகப்பணியில் ஈடுபட்டி ருக்கும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் இந்த ஊரடங்கு காலத் தில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதால் அனைத்து உணவகங் களையும் முழுமையாக செயல்ப டுத்த தமிழக அரசு உத்தரவிட வேண் டும் என சிஐடியு ஹோட்டல் தொழி லாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்ட லாட்ஜ்,  ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழி லாளர் சங்கத்தின் (சிஐடியு) தலை வர் கே.மனோகரன், பொதுச்செய லாளர் ஏ.எல்.ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட ஊரடங்கை பிறப் பித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உணவ கங்கள், தங்கும்விடுதிகள், மன மகிழ் மன்றங்கள் மற்றும் சமை யல் தொழிலாளர்கள் என ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி, வருவாயின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் உணவகங்கள் முழுமையாக திறக் கப்படவில்லை. திறக்கப்பட்டுள்ள உணவகங்களிலும் பார்சல் மட் டுமே விற்பனை செய்யலாம் என அரசின் அறிவிப்பால் மிக குறைந்த தொழிலாளர்களே பணியில் உள் ளனர். மக்களுக்காக உணவு சமைத்து போட்ட தொழிலாளர்கள் இன்று உணவிற்கே வழியில்லாத நிலையில் உள்ளனர். அரசின் நிவா ரணங்களும் இவர்களுக்கு வந்து சேரவில்லை. ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊதி யம் வழங்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவு எந்த உணவகங் களிலும் நடைமுறைப்படுத்த வில்லை. வேலைபார்த்தால்தான் கூலி என்கிற நிலையில் இந்த உணவக தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளது.  ஆகவே, தமிழக அரசு உடன டியாக அனைத்து உணவகங்க ளையும் முழுமையாக செயல்பட உத்தரவிடவேண்டும்.

ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்காத நிறுவனங்கள் ஊதியம் வழங்கப் படுவதை உறுதிப்படுத்திட உரிய உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். இதேபோல திருமணம் உள்ளிட்ட நிகழ்விற்கு சமையல் செய்து வாழ்வாதரத்தை பாதுகாத்து வந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் தற்போது நிர்க்கதியாக நிற்கின்றனர். எப் போது இயல்பு வாழ்க்கை திரும் பும், பழையபடி ஊர்கூடி திரும ணம் உள்ளிட்ட விழாக்கள் நடை பெறும் என்பதே தற்போது தெரி யாத நிலையில் உள்ளது. ஆகவே இத்தொழிலாளர்களின் குடும்பங் களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மாதம் ரூ7,500 வழங்க உரிய ஆணை பிறப்பிக்க வேண் டும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.