கணவன் - மனைவி தீக்குளித்து தற்கொலை
தாம்பரம், ஜூலை 27- பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். (37) லாரி ஓட்டுநர். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (26). இருவரும் காதலித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட னர். திருமணத்துக்கு பின் தாம்பரத்தை அடுத்த பீர்க்கன் கரணை பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளி யன்று(ஜூலை 26) இரவு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ண ம்மாள் மண்எண்ணையை தன் உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வ தாக மிரட்டியுள்ளார். அப்போது அய்யனாரும் தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். இதில் பதறிப்போன மனைவி கணவனை காப்பாற்ற முயன்ற போது இரு வருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயில் கருகிய இருவரை யும் மீட்டு அரசு மருத்து மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சனிக்கிழமை யன்று (ஜூலை 27) காலை பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெட்ரோ ரயில் பணி நிறைவு: மீண்டும் நான்கு வழிப்பாதையானது நந்தனம்
சென்னை, ஜூலை 27- சென்னை நகரில் மெட்ரோ ரயில் இரு வழித்தடங்களில் இயக்கப் பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.இதில் அண்ணாசாலையிலும் மெட்ரோ ரயில் பணி நடந்து வந்தது. இதனால் 2012 ஆம் ஆண்டு முதல் அண்ணா சாலை, நந்தனத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டது. இந்நிலையில் அண்ணா சாலையில் மெட்ரோரெயில் பணி நிறைவு பெற்றதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் போக்குவரத்து காவல்துறைக்கு தெரி விக்கபட்டது. இதையடுத்து நந்தனம் ஜங்ஷனில் 7 ஆண்டு களுக்கு பிறகு வெள்ளியன்று (ஜூலை 27) முதல் மீண்டும் நான்கு வழிப்பாதை போக்கு வரத்து துவங்கியது. இதன் மூலம் இனி வாகன ஓட்டிகள், தி.நகர் வெங்கட நாராயணா சாலையில் இருந்து மந்தைவெளி ஆர்.ஏ.புரத்துக்கு சேமியர்ஸ் சாலை வழியாக செல்லலாம். இதுகுறித்து போக்கு வரத்து காவல்துறையினர் கூறும்போது, நந்தனம் ஜங்ஷனில் நான்கு வழிப்பாதையில் வாகனங்களை அனுப்பும் பணியில் தற்போது காவல்துறையினர் ஈடுபடு கிறார்கள். வாகன ஓட்டிக ளுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்போம் என்றனர். மேலும், ஒருவழிப் பாதையாக உள்ள முக்கிய சாலைகளைத் தேர்வு செய்து அதை இரு வழிப்பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தியாக ராயநகர் பகுதிகளில் உள்ள ஒருவழிப்பாதைகளை இருவழிப் பாதைகளாக மாற்ற போக்குவரத்து காவல்துறையினர் ஆலோசித்து வந்தனர். அதன்படி, சோதனை முயற்சியாக நந்தனம் சேமியர்ஸ் சாலை - வெங்கட் நாராயணா சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் சாலையும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், தியாகராயநகர் வடக்கு போக் சாலை முழுவதும் இரு வழிப்பாதை யாக மாற்றப்படுகிறது. நந்தனம் தேவர் சிலை அருகி லும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை திருடி விற்ற 3 நிறுவனங்களுக்கு சீல்
செங்குன்றம், ஜூலை 27- சோழவரம் ஒன்றியத்தில் பூதூர் ஊராட்சி கொக்குமேடு கிராமம் உள்ளது. அரசு அனுமதி இல்லாமல் மூன்று இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் திருடப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங் களுக்கு விற்பனை செய்யப்பட்டது. பூதூர் மற்றும் கொக்குமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த மாதம் பொதுமக்கள் அருமந்தை கூட்டுச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பொன்னேரி வருவாய் துறையினர் மற்றும் சோழவரம் காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் கொக்குமேடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுக்க பயன்படுத்தப்படும் 3 மின்மோட்டார்களை பெண்கள் அடித்து நொறுக்கினர். இந்நிலையில் கொக்குமேடு கிராமத்தில் 3 இடங்களில் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்தினர் நிலத்தடி நீர் எடுப்பதை பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து சோதனையிட்டனர். அனுமதியின்றி தண்ணீர் திருடி விற்ற மூன்று நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். அந்த உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர் நிலத்தடி நீர் திருடி விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சோழவரம் காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.