tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வெற்றி

சென்னை, ஜூலை 26 - மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் ஜூலை 6ஆம் தேதி நடை பெறும் என்று தாம்பரம் கோட்டாட்சியர் உறுதிய ளித்தார். கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தக் கோரி புதனன்று (ஜூன் 26)  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி உள்ளிட்டத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பா. ஜான்சிராணி கூறியதாவது: தாம்பரம், பல்லாவரம் வட்டங்களில் மாற்றுத்திற னாளி களுக்கான மாதந்திர பராமரிப்பு தொகை மறுக்கப்படுகிறது; பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறு வதில் சிரமம் நீடிக்கிறது. பேருந்துகளில் அவ மானப்படுத்துவதும், அர சாணைப்படி சலுகை பயணச்சீட்டு வழங்கா மல் நடுவழியில் இறக்கி விடப்படுவதும் தொடர்கிறது. ரயில் பயணச்சீட்டு பெறுவதி லும் சிக்கல் நீடிக்கிறது. இதுபோன்ற பிரச்சனை களை சரிசெய்ய அனைத்துத் துறை அதிகாரிகளுடன் மாதந்தோறும் கோட்டாட்சி யர் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்த அரசு உத்தர விட்டுள்ளது.

அதன்படி கூட்டங்களை நடத்துவ தில்லை. இதனைக் கண்டித்து  போராட்டம் நடத்தி னோம். தாம்பரம் கோட்டாட்சி யரை சந்திக்க 25 படி ஏறிச் செல்ல வேண்டி உள்ளது. எனவே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடை யில்லா சூழலை உருவாக்க மின்தூக்கி வசதி ஏற்படுத்த வும், மாதந்தோறும் குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தவும் கோரினோம். அவற்றை ஏற்றுக் கொண்ட கோட்டாட்சியர், ஜூலை 6ஆம் தேதி குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த ஒப்புக் கொண்டார். எனவே, ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று குறை தீர்ப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்” என்றார். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் என்.சாந்தி, பொருளாளர் கே.பி. பாபு, நிர்வாகிகள் வி.மாயவன், சம்பத்குமார், எம். சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர்.