tamilnadu

img

தனியார்மய ஆபத்தை தடுத்து நிறுத்துக! ஆளுநர் மாளிகை நோக்கி ரயில்வே தொழிலாளர்கள் பேரணி

சென்னை, டிச. 11 - ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். மத்திய அரசு ரயில்வேயை தனியார் மயமாக்கி வருகிறது. தில்லி-லக்னோ இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது. மேலும் 50 வழித்தடங்களில் 150 ரயில் களை தனியார்மயமாக்க உள்ளது. கோச் என்ஜின் உற்பத்தி செய்யும் 8  தொழிற்சாலைகளையும் தனியார்மய மாக்க உள்ளனர். புதிய கோச், என்ஜின்களை இறக்குமதி செய்ய உள்ளனர். சென்னை-கோவை, சென்னை -மதுரை, சென்னை-பெங்களூரு வழித் தடங்கள், சென்னை-ஹவுரா, சென்னை-மும்பை உள்ளிட்ட தடங்களும், சென்னை புறநகர் ரயில்களையும் தனியார்மயமாக்க உள்ளனர். இந்நிலையில் ரயில்வே தனியார் மயத்தை எதிர்த்து புதனன்று (டிச.11) சைதாப்பேட்டை ரயில் நிலை யத்திலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது. ரயில்வே தனியார்மயத்திற்கு எதிரான ரயில்வே தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு (டிஆர்இயு, ஸ்டேசன் மாஸ்டர்ஸ்  அசோசியேசன், லோகோ ஸ்டாப் அசோ சியேசன், டெக்னிக்கல் ஸ்டாப் அசோசியேசன் உள்ளிட்ட  10 சங்கங்கள்) சார்பில்  இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியை ரயில்நிலையத்தின் வாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தினிடையே டிஆர்இயு துணைத்தலைவர் ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயிலில் பயணம் செய்யும் ஒரு பயணிக்கு பீச்-தாம்பரம் சென்றுவர மாதம் 600 ரூபாய் செலவாகும். ஆனால், சீசன் டிக்கெட்டாக 150 ரூபாய்தான் வசூலிக்கிறது. ரயில் தனியார்மயமானால் இந்த சீசன் டிக்கெட் ரத்து செய்யப்படும். அதேபோன்று முதியோர், மாணவர்கள், குழந்தைகள், ஊனமுற்றோருக்கான சலுகைகளும் ரத்து செய்யப்படும். இடஒதுக்கீடு பறிபோகும். ரயில்வே ஊழியர்களின் வேலை பறிபோகும். குறைந்த சம்பளமே வழங்கப்படும். லாபத்தை நோக்கமாக கொண்ட தனி யார் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க மாட்டார்கள். இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும். எனவே, ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆளுநரை சந்தித்து மனு அளித்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக இந்தப்போராட்டம் நடைபெறுகிறது.  மாளிகையில் ஆளுநர் இல்லை என்பதால் ஆளுநருக்கு மின்ன ஞ்சல் மூலம் மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இப்போராட்டத்தில் டிஆர்இயு பொதுச்செயலாளர் மாத்யூஸ் சிரியாக், கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலச்சந்தர்,  ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.