tamilnadu

மாணவர்களுக்காக இணைய சேவை மையங்களை அமைத்திடுக: அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்திடுக! மாணவர் சங்கம் கோரிக்கை

சென்னை,ஆக.09- தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள்  விண்ணப்பிப்பதற்கான கால  அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் இணைய வழியே கடந்த ஜூலை மாதம் 20 முதல் 31  ஆம் தேதி வரை பெறப்பட்டது. ஊரடங்கு காலம் என்பதால் நேரடி விண்ணப்பம் சாத்தி யமில்லை என்பதால் இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இணைய வழியே தமிழகம் முழு வதும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது இது முதல் முறை என்பதாலும் சாதாரண ஏழை எளிய கிராமப் புற மாணவர்கள், மலைக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே தமிழக அரசு இணைய சேவை மையங்களை அமைத்து உதவ வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டது.

 தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 109 கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்தாண்டு விண்ணப்பித்த மாணவர் களைவிட இவ்வாண்டு குறைவாகவே விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது. மேலும் பல மாணவர்கள் விண்ணப்பிப்பதில் இணையம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளதால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாமல் போனது.  அதேபோல் பனிரெண்டாம் வகுப்பில் ஒரு தேர்வு மட்டும் எழுதாமல் இருந்த 34  ஆயிரம் மாணவர்கள் தற்போது தேர்வெ ழுதி முடிவுகள் வந்துள்ளன. அந்த மாண வர்களில் பெரும்பாலும் புதியதாக விண்ண ப்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது. எனவே தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி இம்மாத இறுதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கிட வேண்டும். மேலும் அரசு சார்பில் இணைய சேவை மையங்களை அமைத்து மாணவர்களுக்கு உதவிட முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.