tamilnadu

ராதாபுரம் தொகுதியில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை

 சென்னை, அக்.3- ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண் ணிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடந்த  சட்டமன்றத் தேர்தலின் போது, திரு நெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி யில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரை யிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக  திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர்  தனது மனுவில், வாக்கு எண்ணிக்கை யின்போது 203 தபால் வாக்குகளை எண்ணா மல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களில் 19, 20 மற்றும் 21வது சுற்று வாக்கு களையும் எண்ண உத்தரவிட்டது. இந்த  உத்தரவை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த  இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து மறுவாக்கு எண்ணிக் கையை நிறுத்தி வைக்கக்கோரி எம்எல்ஏ இன்பதுரை, உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தார். அந்த மனு வியாழனன்று (அக்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு  தடை இல்லை எனக் கூறிய நீதிமன்றம், இன்பதுரையின் மனுவை நிராகரித்தது. மறு வாக்கு எண்ணிக்கை எப்போது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையம் அளிக்கும் அறிக்கையைத் தொடர்ந்து அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.  இதனைத் தொடர்ந்து ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளின் மறு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை(அக்.4) காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.