சென்னை,அக்டோபர்.25- சென்னையில் நடைபெற்ற போதைபொருள் கடத்தல் சோதனையில் முன்னாள் டிஜிபியின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற போதைபொருள் ஒழிப்பு சோதனையின்போது முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மகன் அருண், நைஜீரியாவை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.