tamilnadu

மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி துவங்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 9- தமிழக சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைத் துறை ஆகிய மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி,“ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்டக் கல்லூரி துவங்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டும்” என்றார்.
மாவட்ட நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரைக்கும் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி. சண்முகம்,“உயர்நீதிமன்றத் தின் பரிந்துரைகள் அனைத்தும் உடனுக்கு உடன் நிறைவேற்றி கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தற்போது 83 இடங்கள்தான் காலியாக உள்ளது. அதுவும் விரைவில் நிரப்பப்படும் என்றார்.