tamilnadu

img

ஆவின் நிர்வாகத்தை கண்டித்து ஆக.6 இல் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 31- திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் கொள்முதல் செய்யமறுக்கும் ஆவின் நிர்வாகத்தை கண்டித்தும், உற்பத்தியாகும் முழு பாலையும் கொள்முதல் செய்யக் கோரியும், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக அனைத்து பால் ஊற்றும் இடங்களிலும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று காலை 7 மணி முதல் மாலை வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் தேங்கும் பாலை குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்கள் பால் விலையைக் குறைக்காமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆவின் நிர்வாகம் தொடர்ந்து பால் கொள்முதல் செய்ய மறுத்தால் அடுத்தகட்டமாக வரும் 6ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆவின் பால் கூட்டுறவு மாவட்ட தலைமையகத்தை முற்றகையிடப் போவதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.