tamilnadu

கடலூர் முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் - மறியல்

கடலூர், ஜூலை 4- அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதால் மற்ற ஓட்டுநர்கள் திட்டக்குடியில்  சாலை மறியலில் ஈடுபட்ட னர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து திட்டக்குடிக்கு புதன்கிழமை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் மணி ஓட்டிச் சென் றார். கூடலூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது அரசுப் பேருந்தை முந்திச் செல்ல தனியார் பேருந்து முயற்சித்துள்ளது. அப்போது, தனியார் பேருந் தின் நடத்துனர் செல்வராஜ், ஓட்டுநர் மணியை ஆபாச மாக பேசியதாகக் கூறப்படு கிறது. இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைக லப்பானது. தொடர்ந்து திட்டக்குடி பேருந்து நிலை யத்திலும் இரண்டு பேருந்து களின் ஊழியர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  தகவலின் பேரில் இரண்டு  பேருந்துகளின் ஊழியர் களையும் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத் துச் சென்றனர். இதில் அரசுப்  பேருந்து ஓட்டுநர், நடத்து னரை மட்டும் காவல் நிலை யத்தில் அமர வைத்துவிட்டு, தனியார் பேருந்து ஊழி யர்களை வெளியே விட்ட தாக தகவல் பரவியது. இத னால் அரசுப் பேருந்து ஊழி யர்கள் திட்டக்குடி பேருந்து  நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி விட்டு, தனியார் பேருந்து ஊழியர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி  சரக காவல் துணை கண்  காணிப்பாளர் குணசேகரன்  அரசு பேருந்து ஊழியர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி னார். பின்னர் மணி அளித்த புகாரின் பேரில் செல்வராஜ் (49) மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

6 ஆண்டுகளாக தேடப்பட்டவர் சடலமாக மீட்பு

கடலூர், ஜூலை 4- கடலூரில் காணாமல் போனவர் கொலை யானதாக கிடைத்த தகவலின் பேரில் அவரின்  உடலை காவல் துறையினர் தோண்டி எடுத்த னர். நாகை மாவட்டம் கூழையூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவருக்கும் கடலூர் சிங்காரத்தோப்பினைச் சேர்ந்த சுனிதா என்ப வருக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2  குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியா வில் வேலைப்பார்த்து வந்த முருகேசன் கடந்த  2013ஆம் ஆண்டு தனது மைத்துனர் திரு மணத்திற்காக சிங்காரத்தோப்பிற்கு வந்த நிலையில் ஊருக்குத் திரும்பவில்லை. பல  இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்தத் தக வலும் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து முருகேசனின் தாயார் பவுனம்மாள் நாகை மாவட்டத்திலும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் முரு கேசன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்க லாம் என தெரிய வந்தது. மேலும் இந்த  கொலை தொடர்பாக அவரது மனைவி சுனிதா,  முருகேசனின் தம்பி சுமையர் ஆகியோரிட மும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும்  முருகேசன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து  உடலை வியாழனன்று (ஜூலை 4) வெளியே  எடுத்து  கடலூர் வட்டாட்சியர் மற்றும் அரசு  மருத்துவர் முன்னிலையில் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.