tamilnadu

சென்னை வந்த சீனப் பயணிக்கு  கொரோனா வைரஸ் அறிகுறி

சென்னை.பிப்.2 மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீன பயணி லுவிஜினுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்ததால் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சனிக்கிழமை நள்ளிரவு 12.40 மணி அளவில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமான பயணிகள் அனைவரும் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் சீனாவை சேர்ந்த லுவிஜின் என்ற ஆண் பயணியும் இருந்தார். 46 வயதான இவர் சீனாவில் இருந்து ஹாங்காங் சென்றுள்ளார். அங்கிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு வந்தது தெரிய வந்தது. சீனப் பயணி லுவிஜினுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்ததால், விமான நிலைய சுகாதார முகாமில் இருந்த பணியாளர்கள் மத்தி யில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி சுகாதார துறையின் உயர்அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சீனப் பயணியை தனிமைப்படுத்த உத்தரவிட்டனர். இதன்படி சீன பயணி லுவிஜின், சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு கொரோனா வைரஸ் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.