சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை உமாராணி தேசியக் கொடியையும் ஒலிம்பிக் சுடரையும் ஏற்றிவைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். ஸ்டேட் வங்கியின் சிதம்பரம் கிளை மேலாளர் ராமன் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் உடற்கல்வி இயக்குநர் பிரன்சிஜெபஸ்டின், செயலாளர் கிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ரவிசங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் வாசுதேவன், திருநாவுகரசு மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.