tamilnadu

img

300 சுற்றுலா தலங்கள் தரம் உயர்வு: அமைச்சர் தகவல்....

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலா தளங்களில் சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடந்த விவாதத்திற்கு பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் மா.மதி வேந்தன்,”கன்னியாகுமரியில் அமைந்துள்ள 133 அடி அய்யன் திருவள்ளுவர் சிலையை மேலும் அழகூட்டும் வகையில் சுற்றுலா பயணிகள் இரவிலும் கண்டு மகிழ லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமான ஒளியூட்டும் அமைக்கப்படும்” என்றார்.கொல்லிமலை பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் தமிழ்நாட்டின் சுற்றுலா இடங்களை மேம்படுத்த சுற்றுலா தளங்கள் வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக மதுரை கொடைக்கானல் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ஒரு கோடி ரூபாய் செலவில் இறங்கு தளம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இளைஞர்களிடையே சாகச சுற்றுலாக்கள் அதிகம் வரவேற்ப்பை பெற்றுள்ளது மேலும் இவர்கள் திறந்தவெளி முகாம்களில் தங்கி செல்வம் ஆர்வம் காட்டுகின்றனர் இதனை ஊக்கப்படுத்தும் வகையில் சாத்தியக்கூறு உள்ள 10 இடங்களை தேர்வு செய்து சாகச சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் திறந்தவெளி முகாம்கள் ஏற்படுத்தப்படும் ஒகேனக்கல், ஜவ்வாது மலை ஏலகிரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளம் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என அறிவித்தார்.75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 75 சுற்றுலாத்தலங்கள் விளம்பரப்படுத்தப்படும் என்றும், சுற்றுலா துறை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும் என்றும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரான பூம்புகார் புனரமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டப்படும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதமாக மதுரை, கொடைக்கானல் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக் கப்படும் என்றும் கூறினார்.