tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

‘விரைவுச்சாலையாக பெயர் மாற்றினாலும் ஏற்க மாட்டார்கள்’
வேலூர், ஜூலை 22- எட்டு வழிச்சாலையை விரைவுச்சாலை என, பெயர் மாற்றினாலும், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,’’ என, தி.மு.க., பொருளாளர் துரைமுரு கன் கூறினார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறு கையில், “தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வார, 500 கோடி, 330 கோடி  ரூபாய் ஒதுக்கியது. இதுவரை, எத்தனை ஏரிகளை தூர்வாரினார்கள் என்ற விபரத்தை கொடுக்க மறுக்கின்றனர்” என்றார்.

இளம்பெண் தற்கொலை
வேலூர், ஜூலை 22- திருப்பத்தூர் அருகே சீரங்கம்பட்டியைச் சேர்ந்த சங்கரின் மகள்  சந்தியா (19). இவருக்கும், கதிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கௌசிக்குக்  கும் (25) கடந்த 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சந்தியா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை  அருந்தினார். தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சடலத்தை மீட்டு, அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 நாள்களில்  சந்தியா தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக திருப்பத்தூர்  சார்-ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.