வேலூர், மே 6- கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலும் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டத் தில் பிரம்மபுரம் அரசு மேனிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அஜீஸ்குமார் தெருவோரங்க ளிலும் வசிக்கும் ஏழை மக்கள், முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு மார்ச் 24ந் தேதி முதல் மதிய உணவு வழங்கினார்.
கூலித் தொழிலாளர்கள், ரயிலில் வியா பாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு ஆசிரி யர்கள் அஜீஸ்குமார், வா.ராமமூர்த்தி ஆகி யோர் தங்களுடன் பணியாற்றும் ஆசிரியர்க ளிடம் நிதி பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர். காட்பாடி சேவூர் பகுதியில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தின ருக்கும், விஐடி பல்கலைக்கழகம் எதிரே தங்கி பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கி வந்தனர். மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அவர்களது களப்பணி வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி, ஜாப்ராபேட்டை பகுதி பீடித் தொழிலாளர்கள், தோட்டப்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ, சுமைப்பணி. கட்டுமான தொழிலாளர்கள், பிற பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், அருந்ததிய மக்கள், இருளர் இன மக்கள், நரிக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், 22 திருநங்கைகள் என அவர்களின் உதவி நீண்டு கொணடே செல்கிறது. வள்ளிமலை, திருவலம் அரசுப்பள்ளியில் பயிலும் அடித்தட்டு குடும்ப மாணவர்களின் 55 குடும்பத்தினர் என 1,600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பி லான நிவாரணப் பொருட்களை வழங்கி யுள்ளனர். ஆசிரியர்களின் இந்த சமூகப் பணி பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள் ளது. பலரும் இவர்களது பணியை பாரட்டி யுள்ளனர்.