tamilnadu

img

ஏர் இந்தியாவில் பயணம் செய்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹாங்காங் அரசு

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு பயணித்தனர். இதில் பயணித்த 14 பயணிகளை கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிரையில்  அவர்கள் அனைவருக்கும்  கொரோனா தொற்று உள்ளதாக வெள்ளியன்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் காரணமாக, ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஆகஸ்ட் இறுதி வரை ஹாங்காங்கில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் ஹாங்காங் அரசாங்கம் வெளியிட்டுள்ள விதிகளின்படி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயணி, பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் செய்யப்பட்ட சோதனையிலிருந்துகொரோனா தொற்று இல்லை என  சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே ஹாங்காங்கிற்கு வர முடியும் என ஹாங்காங் அரசு அறிவித்திருந்தது.