tamilnadu

img

திண்டிவனம் நகரில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

 விழுப்புரம், ஏப்.22- விழுப்புரம் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இம்மாவட்டம் சிவப்புப் பட்டியலில் உள்ளது. இதுவரை விழுப்புரம் நகரத்தை மட்டுமே அதிக அளவில் தாக்கிய கொரானா தற்போது திண்டிவனத்தில் வெளியூருக்கு சென்று திரும்பியவரின் மனைவி, அவரது 7 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து, திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை, குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் சுகாதாரத் துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்ட சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

திண்டிவனம் நகராட்சிக் குபட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை காலை, மாலை இருமுறை மேற்கொள்ள வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மூன்று வேளையும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவுறுத் தியுள்ள தகவல்களை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  திண்டிவனம் நகராட்சிக் குட்பட்ட 33 வார்டுகளையும், நான்கு பகுதிகளாக பிரித்து, அந்தப் பகுதிகளை வட்டாட்சியர் மூலம் கண்காணிக்க வும், திண்டிவனம் சாராட்சியர் தலைமையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் காவல் துறை கட்டுப்பாட்டில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். வெளிப்பகுதியில் உள்ள வாகனங்கள் நகராட்சி எல்லைக்குள் நுழையாத வண்ணம் தடுப்பதற்கு, காவல் துறையினர் ஒரு வழிச்சாலைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கி செயல்படுத்த உத்தரவிட்டார்.  மேலும், தொற்றுள்ளதாக கூறப்பட்ட குழந்தையை தனி வார்டில் வைத்து சிறப்பு மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.