சென்னை, ஆக.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகியின் கணவர் ஏ.பி. விஸ்வநாதன் (75) திங்களன்று (ஆக.24) காலமானார். இவர் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 25 ஆண்டு கள் பணிபுரிந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலம் பாதிக்க்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை நீலாங்கரை கசுரா கார்டன் ஏ 1, நாகர் ஆஷியான என்ற விலாசத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்ம நாபன், டி.கே.ரங்கராஜன் ஆகி யோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சோழிங்கநல்லூர் பகுதி செய லாளர் வீரா ரெட்டி உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி செவ்வா யன்று காலை 11 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.