tamilnadu

img

விழுப்புரம்: கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சூழலில், புதுவை, மரக்காணம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில்  அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், வம்பாமேட்டை சேர்ந்த சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும்,  மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.