இராசபாளையம், மே 13- தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 59 ஆக உயர்த்தியதை யும் விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை பெட் ரோல் ஊற்றி எரிந்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி மாநிலம் முழு வதும் வயிற்றில் ஈர துணி கட்டி முழக்க மிடும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் புதன்கிழமை யன்று நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக இராஜ பாளையம் நகர், கிழக்கு மேற்கு வத்ராப் ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ராஜபாளையம் நகர் எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செய லாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். நகர் குழு உறுப்பினர் முத்துகுமார், மாரி யப்பன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க அலுவலகத்தில் நகரத் தலைவர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பிரசாந்த், பிரபாகரன், முத்துக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இராஜை கிழக்கு அய்யனாபுரம் கிளை யில்ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம், ஜனனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராஜை மேற்கு ஒன்றியம் முகவூரில் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராமர், மாடப்பன், கமலக் கண்ணன், விமல், சூரியா ஆகியோர் கலந்து கொண்டனர். வத்ராப் ஒன்றியம் காடனேரியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.தென்னரசு தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் மணிக்குமார், பி.ராஜா, தங்கமுனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.