உளுந்தூர்பேட்டை, நவ.6- விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அடகு வைத்த நகைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை யடிக்கப்பட்டது. இந்த நகைகளை உரிய வர்களுக்கு தமிழக அரசும், கூட்டுறவுத்துறை யும் பொறுப் பேற்று திருப்பி வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருநாவலூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. 497 விவசாயிகளின் 1790 பவுன் நகை திருடு போய் பத்து ஆண்டுகள் ஆகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நகைகளை திருடியவர்களை கண்டுபிடித்து ஒன்றேகால் கிலோ நகைகள் உருக்கிய நிலையில் கண்டு பிடித்து 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அடகு வைத்த விவசாயிகளுக்கு நகைகள் திரும்ப தரப்படவில்லை. இந்நிலையில் 497 விவசாயிகளுக்கும் நகைகளை திருப்பி வழங்கும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்ற முடிவின்படி புதனன்று (நவ.6) காலை முதல் நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.வி.ஏழுமலை தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், சிபிஎம் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.தாண்ட வராயன், செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, துணைச் செயலாளர் ஆர்.சீனுவாசன், பொரு ளாளர் வி.ரகுராமன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். ஜோதிராமன், ஒன்றியத் தலைவர் எஸ்.வி.சிவக்குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். முன்னதாக செப்டம்பர் 5 செவ்வாயன்று மாலை உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அரசு நிர்வாகம் சார்ந்து விவ சாயிகளுக்கு நகைகளை திருப்பித் தருவதற்கான எந்த உத்தரவாதமும் அளிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புதனன்று(நவ.6) மாலை வரையில் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் நிர்வாகிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.