tamilnadu

விழுப்புரம் முக்கிய செய்திகள்

கொலை வழக்கில் பிணை வழங்கக் கூடாது: திருநங்கைகள்
விழுப்புரம், ஆக.22-விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச்சங்கம் ராதாம்மாள் தலை மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தனர். அதில் விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் 200 திருநங்கைகள் வாழ்ந்து வருகிறோம். எங்களோடு இருந்த, அய்யங்கோவில்பட்டு கிரா மத்தில் வசித்த அபிராமி என்ற திருநங்கையை, மூன்று திருநங்கை களான புனிதா, கயல்விழி, மதி ஆகியோர் 4 ஆண்களோடு சேர்ந்து,  கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் சிறை தண்டனை அனு பவித்து வரும் 7 பேரும், வெளிவர முடியாதபடி சிறைதண்டனை அனு பவிக்க வேண்டும். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இது போன்ற தீர்ப்பால், இது மாதிரியான எண்ணத்தில் உள்ள மற்ற திருநங்கை கள் திருந்த ஒரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

வெள்ளைப் பொன்னி விதைநெல் தேவை: விவசாயிகள்
விழுப்புரம், ஆக.22-விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து  வருகிறது. இந்நிலையில் செஞ்சி பகுதியில் சில ஆண்டுகளுக் குப் பிறகு, ஒரு போக நெல் சாகுபடி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த  நிலையில், வெள்ளைப் பொன்னி நெல்லை சாகுபடி செய்ய விவசாயி கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. மாவட்டத்தில் செஞ்சி, மேல்மலை யனூர், அவலூர்பேட்டை, அனந்தபுரம், வல்லம் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் இந்த நெல் ரகத்தை சாகுபடி செய்ய முனைப்புக் காட்டி வருகின்றனர். இந்தப் பயிருக்கு அடி உரம் இட்டால்  போதுமானது. அறுவடைக்கு பின் நெல் மூட்டை ரூ.2,500-க்கு விலை போகும் என்பதால்  இந்த ரக நெல் விவசாயிகள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி  வருகின்றனர். செஞ்சி உள்பட மாவட்டம் முழுவதும் வெள்ளைப் பொன்னி  விதை நெல்லுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஒரு மாதம் முன்பு பெய்த மழையை நம்பி, செஞ்சி மற்றும் சுற்றியுள்ள  பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு வெள்ளைப் பொன்னி  நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது பெய்த  மழையை நம்பி அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளும்  வெள்ளைப் பொன்னி நெல் பயிரிட ஆர்வம் காட்டுவதால் செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் அரசு வேளாண் அலுவலங்களிலும், தனியார்  விற்பனை நிலையங்க ளிலும் இருந்த மிகக் குறைந்த அளவிலான வெள்ளைப் பொன்னி நெல் விதைகளையும் போட்டிப் போட்டுக் கொண்டு  விவசாயிகள் வாங்கிச் சென்றுவிட்டதால், இருப்பு இல்லாத நிலை உள்ள தாக தெரிகிறது, அரசு விற்பனைக் கூடங்களில் 30 கிலோ கொண்ட  வெள்ளைப் பொன்னி விதை நெல் ரூ.1,300-க்கும், தனியார் விற்பனை நிலையங்களில் ரூ.1,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரக  நெல் விதைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர், அதனால் வெள்ளைப் பொன்னி விதைநெல் உடனடி யாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.