ஊராட்சி நிதி முறைகேடு: 3 அலுவலர்கள் பணியிடை நீக்கம்
விழுப்புரம்.செப்.24-விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஊராட்சிச் செயலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவராக இருந்தவர்கள் அந்தப் பகுதியில் அரசுப் பணிகள் நடைபெற்றதாக போலியான ஆவணங்கள் தயார் செய்து, ரூ.26 லட்சம் வரையில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் அப்போது வெளியாகின. ஆனால் அதை அப்போது தணிக்கை செய்ய வேண்டிய ஒலக்கூர் தணிக்கைப் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஜெயக்குமார், தணிக்கை செய்யாமல் தவிர்த்துள்ளனர். மேலும், இதைக் கண்காணிக்க வேண்டிய தணிக்கைப் பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஜோதி, புவ னேஸ்வரி ஆகியோர் கண்காணிக்கத் தவறியதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து, தற்போது கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஜோதி, புவ னேஸ்வரி ஆகியோரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வலுக்கட்டாயமாக தாலி கட்டி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்குப் பதிவு
தேனி, செப். 25-ஆண்டிபட்டி அருகே கல்லூரி மாணவியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் . ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி நாகர்கோவில் அருகில் உள்ள அம்மாண்டி விளை பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த கொடியரசன் மகன் ராஜேஷ்குமார் (வயது24) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார். கடந்த ஜுன் 15 ஆம் தேதி மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவரை வெளியே வரவழைத்து ஒரு கடை முன்பு வலுக்கட்டாயமாக தாலி கட்டினார்.பி ன்னர் மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ராஜேஷ்குமாரின் தொல்லை வரம்பு மீறி போகவே தனது பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதுள்ளார். இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ராஜேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.