விழுப்புரம், ஜூலை 26- விழுப்புரம்-செஞ்சி சாலையிலுள்ள அயினம்பாளையம் தனியார் பள்ளி அருகே கடந்த 17ஆம் தேதி அபிராமி என்ற திரு நங்கை கொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப் பட்டது. இதற்கிடையில், கொலையான அபிராமியுடன் இருந்த திருநங்கைகள் புனிதா, கயல்விழி, மதுமதி, புனிதாவின் தம்பி வீரபாண்டியன், சகாயம், இம்தியாஸ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலை மறைவாக உள்ள ஆமோஸை தேடி வருகின்றனர்.