tamilnadu

பெண் காவலர்களுக்கு கொரோனா சேத்தூர் ஊரக காவல்நிலையம் மூடல்

விருதுநகர், ஜூலை 11- இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில்,  மேலும் இரண்டு பெண் காவ லர்களுக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் காவல் நிலையம் மூடப்பட்டது இராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலை யத்தில் தலைமை காவலராகப் பணியாற்றியவர் அய்யனார் இவர் கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இதனால் காவல் நிலை யத்தில் பணியாற்றும் அனைவ ருக்கும் கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது. இதில் இரண்டு பெண் காவலர்களுக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள் ள்தால் சேத்தூர் ஊரக காவல் நிலையம்  மூடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பணிபுரியும் காவலர்கள் தற்காலிகமாக சேத் தூர் காவல் நிலையத்தில் வழக்கு களை விசாரணை செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் பெருமாள் உத்தரவிட்டுள் ளார். திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் இருவருக்கு கொரோனா  தொற்று உள்ளதால் நகர் காவல் நிலையம் மூடப்பட்டது. தொற்று காரணமாக விருதுநகர் மாவட் டத்தில் இதுவரை எட்டு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.