திருவில்லிபுத்தூர், மே 20- இராஜபாளையம், திருவில்லி புத்தூர், வத்திராயிருப்பு பகுதி களிலிருந்து விருதுநகருக்கு அரசு ஊழியர்களுக்காக இயக்கப் படும் அரசு சிறப்பு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கைஒட்டி இயக்கப்படுவ தால் பேருந்தில் 20 பயணிகள் தான் ஏற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு காற்றில் பறக்க விடப்படுகிறது. வழக்கம்போல் 40க்கும் மேற்பட்ட பயணிகள் தனி நபர் இடைவெளி இல்லாமல் பேருந்துகளில் செல்கிற நிலைமை உள்ளது. திருவில்லிபுத்தூரிலிருந்து விருதுநகருக்கு அரசு நிர்ண யித்த கட்டணம் ரூபாய் 28. ஆனால் தற்போது ரூபாய் 40 கட்ட ணமாக வசூலிக்கப்படுகிறது. திரு வில்லிபுத்தூரிலிருந்து விருது நகர் வரை எந்த நிறுத்தத்தில் ஏறி னாலும் இறங்கினாலும் கட்டணம் ரூபாய் 40 தான்.
இதேபோல் ராஜபாளையத்தி லிருந்து விருதுநகருக்கு வழக்க மான கட்டணம் ரூபாய் 40. ஆனால் தற்போது ரூபாய் 50 வசூலிக்கப் படுகிறது. ராஜபாளையத்திலி ருந்து விருதுநகர் வரை எந்த நிறு த்தத்தில் ஏறினாலும் இறங்கினா லும் ஒரே கட்டணமே வசூலிக்கப் படுகிறது. இதுகுறித்து அரசு போக்கு வரத்து கழக நிர்வாகத்திடம் கேட்டபோது தமிழ்நாடு அரசு, பேரிடர் நிவாரண நிதியாக கூடு தல் கட்டண தொகையை கொடுக் குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது. இந் நிலையில் வேறு வழி இல்லாமல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள்.
கட்டண உயர்வு ஒருபுறம் இருக்க மறுபுறம் தனிநபர் இடை வெளி என்பது பின்பற்றப்படாத நிலைமை உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளை போக்குவரத்து நிர்வாகம் காற்றில் பறக்க விட்டு வருகிறது. பேருந்தில் இடைவெளியை பின்பற்றக் கூடிய வகையில் 20 பயணிகளை தான் ஏற்ற வேண் டும். ஆனால் 40க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் சென்று வரு கிறார்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடுதலாக கட்ட ணம் வசூலிக்கிற போக்குவரத்து நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண் டும். அரசு அறிவித்துள்ள விதி முறைகளின்படி போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் கட்டணம் உயர்வை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையையும் பேருந்தில் செல்கிற பயணிகளான அரசு ஊழியர்கள் விடுக்கின்றனர்.