இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் புதிய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ் அப் வழங்க மத்திய அரசின் என்.பி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் 2 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில், இனி உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எளிதாக பணம் அனுப்ப முடியும். இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. 140 வங்கிகள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. பணப் பரிமாற்றம் மிக பாதுகாப்பானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் பே அம்சத்தை இயக்குவது எப்படி?
·- முதலில் காண்டாக்ட்டில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
·- அடுத்து வாட்ஸ்அப் செயலியின் சாட் பாக்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஷேர் ஃபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
·- இனி டாக்யூமென்ட் மற்றும் கேலரி ஆப்ஷன்களுக்கு இடையில் உள்ள பேமெண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- பின் அனுப்ப வேண்டிய தொகையை பதிவிட்டு யுபிஐ விவரங்களை உள்ளீடு செய்தால் பணம் அனுப்பப்பட்டு விடும்.