சென்னை,ஜூன் 11- காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமையன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து கடந்த மே 18 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் முதலமைச்சர் வெளி யிட்ட அறிவிப்பில், டெல்டா விவசாயி களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை களை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12 அன்று காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறியிருந்தார். இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திறந்து வைக்கிறார்.