மதுரை மத்திய சிறையில் 1500 ஆயுள் சிறைவாசிகள், விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். இவர்களில் 27 சிறைவாசிகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் தயாரித்து வருகின்றனர். தினமும் 2 ஆயிரம் கவசங்களை தயாரிக்கப்படுகிறது. ஒரு கவசம் ரூ.10க்கு விற்கப்படுகிறது. முகக்கவசங்கள் மதுரை காவல்துறையினருக்கு அனுப்பப்படுகின்றன. இதுவரை ஆறாயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பணியை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் ஆய்வு செய்தனர்.