tamilnadu

img

தமிழகம் முழுவதும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் வரை ரேசனில் அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்குக!

சென்னை, ஜூலை 17- டிசம்பர் மாதம் வரை தமிழகத்தின் அனை த்து ரேசன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் இலவசமாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் ஜூலை 17 வெள்ளியன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 350க்கும் மேற்பட்ட மையங்களில் நடை பெற்ற இப்போராட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர். விடுதலைப் போராட்ட வீரரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.எஸ்.ருக்மணி அம்மாள் நினைவு தினத்தையொட்டி ஜூலை 17 அன்று இவ்வியக்கத்தை மாதர் சங்கம் நடத்தியது. தோழர் ருக்மணி அம்மாள், வெள்ளை ஏகாதி பத்தியத்திற்கு எதிராக சிங்கமென சீறியவர். 

மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவரான கே.பி.ஜானகியம்மாளு டன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை ஆண்டு காலம் அடைக்கப்பட்ட மகத் தான விடுதலைப் போராளி. தென்னிந்தியா வில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்ட முதல் பெண் கைதிகள் ஜானகி அம்மா வும், ருக்மணி அம்மாவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ருக்மணி அம்மாள், மகாத் மா காந்தி நடத்திய தண்டி யாத்திரையில் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தலைவரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் மாதர் சங்கம் நடத்திய இப்போராட்டத்தில், ஊர டங்கு நீடிப்பதையொட்டி ரேசன் கடை களில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத் தையும் டிசம்பர் வரை இலவசமாக வழங்க வேண்டும், தரமானப் பொருட்களை வழங்க வேண்டும், ரேசன் கார்டுகள் இல்லாத குடும்பங்கள் அனைத்திற்கும் இலவசமாக உணவுப்பொருள் வழங்க வேண்டும், வறு மைக்கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங் களுக்கு ரூ.7500 ரொக்கப் பணம் வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை, கொரோ னா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி, பங்கேற்ற பெண்கள் முழக்கமிட்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 41 மையங்கள், மதுரை மாநகரில் 26 மையங் கள், தூத்துக்குடியில் 25 மையங்கள், வட சென்னை, குமரியில் தலா 22 மையங்கள், தர்மபுரியில் 19 மையங்கள், கோவை, நெல்லை 16 மையங்கள், கடலூரில் 18 மையங்கள், விருதுநகரில் 17 மையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடை பெற்றது.  மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா நெல்லிக்குப்பத்திலும், மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி திருவில்லிபுத்தூரி லும், மாநில நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களிலும் பங்கேற்றனர்.