tamilnadu

img

எளிய, நடுத்தர மக்களுக்கான குடியிருப்புகளில் கவனம் செலுத்து

சென்னை, ஜூன் 28- ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் வாங்கக் கூடிய அளவில் குறைந்த கட்டணத்திலான வீட்டுவசதி திட்டங்களில் கட்டுமான நிறு வனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற  வளர்ச்சித்துறை செயலர்  கிருஷ்ணன் கேட்டுக்கொண் டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரு டாந்திர வீட்டு வசதி கண் காட்சியான ப்ராப்ஃபெஸ்ட் 2019ஐ வெள்ளியன்று தொடங்கிவைத்துப்பேசிய அவர், ஏழை எளிய மக்கள்  அனைவரையும் வங்கிக் கணக்கில் சேர்த்தால் மட்டும்  போதாது அவர்களின்பொரு ளாதார வளர்ச்சிக்கு உத வும் வகையில் வங்கிகள் சிறு கடன்களை அதிகரிக்க வேண்டும் என்றார். ஏழை எளிய குடும்பங்களுக்கு எளி தாக வீட்டு வசதி கடன்கள் கிடைப்பதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அர சுக்கும் தனியார் நிறுவனங்க ளுக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் இதில் தான் உண்மையான சவால் உள்ளது. 200 சதுர அடி பரப்பளவு உள்ள வீடுகளை கட்டி ஏழை மக்களுக்கு வழங்கலாம் என்றும் பல கட்டுமான நிறுவனங்கள் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதி திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முத்திரைத்தாள் கட்  டண குறைப்பு உள்ளிட்ட கட்டுமானத் துறையினர் அர சிடம் விடுத்துள்ள கோரிக் கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விரைந்து அதுகுறித்து தீர்வு காண முயற்சிக்கப்படும் என்றும் கிருஷ்ணன் நம் பிக்கை தெரிவித்தார். முன்னதாக செய்தி யாளர்களிடம் பேசிய சிபி ஆர்இ இணைத்தலைவர்கள் கவுரவ்குமார், நிகில் பாட்டியா ஆகியோர் தென் னிந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்கள் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் என்றார். இந்தியாவில் உள்ள மொத்த சொத்து  விற்பனையில் பாதி சென்  னையில் விற்பனையாவதாக வும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4கோடியே 10லட்சம் சதுர அடிகளுக்கும்  அதிகமாக குடியிருப்பு களுக்கான இடம் இங்கு விற்பனையாகி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.  கிரெடாய் தமிழ்நாடு தலைவர் எஸ்.ஸ்ரீதரன், சென்னை தலைவர் ஹபீப், எஸ்பிஐ துணைப்பொது மேலாளர் மணிவாசகம், நவீன் கட்டுமான நிறுவனத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.