tamilnadu

img

கோவை- பழனி பயணிகள் ரயில் துவக்கம்

பி.ஆர்.நடராஜன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்பு

கோவை, அக்.15–  கோவையிலிருந்து பழனி செல்லும்  தற்காலிக பயணிகள் ரயில் நிரந்தர மாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான துவக்க விழா செவ்வாயன்று நடை பெற்றது. இதில் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று  கொடி யசைத்து துவக்கி வைத்தனர்.  நாட்டின் சிறிய நகரங்களை ரயில் சேவை மூலம் இணைக்கும் வகையில் 10 பயணிகள் ரயில்களின் சேவை செவ்வா யன்று நாடு முழுவதும் தொடங்கப் பட்டது. இதில் தமிழகத்தில்  சேலம் - கரூர், பழனி - கோவை, பொள்ளாச்சி  - கோவை ஆகிய மூன்று தற்காலிக ரயில் சேவைகள் நிரந்தரப்படுத்தப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிரந்தர ரயில் சேவையை தில்லியிலிருந்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்.  முன்னதாக, கோவை-பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணி காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரயில் சேவையானது கடந்த 2017 ஆம் ஆண்டு தற்காலிக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய திட்டத்தின் மூலம் இந்த ரயில் நிரந்தர ரயிலாக துவக்கப் பட்டுள்ளது. இதில் பழனிக்கு இயக்கப் படும் புதிய பயணியர் ரயில் மதியம் 1. 45 கோவையில் இருந்து புறப்பட்டு மாலை  4.45 பழனி சென்றடையும். 

இதேபோன்று பழனியில் இருந்து இயக்கப்படும் ரயில் காலை 10. 45க்கு புறப்பட்டு மதியம் 2.20 மணியளவில் கோவைக்கு வந்தடையும்.  இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, புஸ்பத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் புதிய பயணிகள் ரயிலா னது காலை 7.30 புறப்பட்டு 8.40க்கு கோவையை வந்தடையும்.  இதன்பின் கோவையில் மாலை 5.40க்கு புறப்படும் ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் நின்று இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.  முன்னதாக கோவை ரயில் நிலை யத்தில் நடைபெற்ற இந்த துவக்க விழா  நிகழ்ச்சியில்  “பழனி - கோவை” இடையேயான பயணிகள் ரயில்   சேவை யினை கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன்,  மாநிலங் களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஏ.கே. செல்வ ராஜ், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்று கொடி யசைத்து துவக்கி வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர். நடராஜன் கூறுகையில், கோவையில் இருந்து இராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கடந்த காலங்களில் இயக்கப்பட்டதைபோல் மீண்டும் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும். இதேபோன்று கோவை- பெங்களூரு இடையே இரவு நேர ரயில் சேவையும் துவங்க வேண்டும். சேலம் ரயில்வே கோட்டம் இந்த 4 ரயில்களையும் விரைவில் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்த பணிகளை  விரைந்து முடிக்க வலி யுறுத்தும் விதமாக வரும் 23ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் இணைந்து கோவை ரயில் நிலையம் முன்பாக கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.