tamilnadu

img

ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் ஆலோசனை

சென்னை,ஆக. 7- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களு டன் வியாழன்று சென்னை தலைமை செய லகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழக அரசு அறிவிக்கும் மக்கள் நலத்  திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தலையாய பணி அந்தந்த மாவட்ட  கலெக்டர்களுக்கு உண்டு. அந்த வகை யில் ஒவ்வொரு திட்டமும் உரிய காலத்  தில் மக்களைப் போய் சேர்ந்துள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அமைச் சர்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வார்கள். திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி  ஆட்சியர்கள் நேரடியாக முதலமைச்சரிடம் விளக்கம் அளிப்பார்கள்.

அதுபோல, அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் பற்றி வந்த குற்றச் சாட்டுகளுக்கும் ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டியதிருக்கும். மேலும் அரசு திட்டங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், அவற்  றின் தற்போதய நிலை போன்றவை பற்றி யும் கலெக்டர்கள் எடுத்துரைப்பார்கள். திட்டங்களை அமல்படுத்தியதில் சிறப்பாக  செயல்பட்ட ஆட்சியர்களை பாராட்டி முதல்வர் பரிசும் வழங்க உள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு சமீ பத்தில் நடத்தப்படவில்லை. என்றாலும், அரசு திட்டங்கள் குறிப்பாக நீர் மேலாண்மை திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது என்பதுபற்றி ஆட்சி யர்களை  நேரில் அழைத்து ஆய்வு நடத்த  முதலமைச்சர் முடிவு செய்தார்.அதன் படி வியாழன், வெள்ளி ( ஆக.8, 9)ஆகிய இரு  நாட்களில் சென்னை தலைமைச் செயல கத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் ஆட்சி யர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.