tamilnadu

img

3 லட்சம் விவசாயிகளின் வீடுகளில் கருப்புக்கொடி

ஊரடங்கால் பரிதவிப்பு... நிவாரணம் எங்கே?

சென்னை,ஏப்.25-  கொரோனா நோய் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மே 3  ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித் துள்ளன. இதனால் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்காமல் அலட்சிய மாக உள்ள மத்திய, மாநில அரசு களைக் கண்டித்தும் உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரியும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25 அன்று மாநிலம் முழுவதும் 3 லட்சம் விவசாயிகளின் வீடுகளில் கருப்புக்கொடியேற்றப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா ளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தமிழக கிராமப்புற பொரு ளாதாரம் சீரழிந்து போயுள்ளது. நாடே முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி செய்த வேளாண் விளை பொருட்களை விற்க முடியா மல் பணப்புழக்கம் இன்றி விவசா யமே முடங்கிப் போயுள்ளது. தங்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியா வசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரு கின்றனர். விவசாயத்தொழிலாளர் கள், முறைசாரா தொழிலாளர் களுக்கு எந்த வேலையுமில்லாமல் பட்டினிச் சாவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய – மாநில அரசுகளின் அலட்சி யத்தை கண்டித்து ஏப்ரல் 25 அன்று மாநில முழுவதும் விவசாயிகள் அவ ரவர் இல்லங்களில் கருப்புக் கொடி யேற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரிய நிதி ரூ.13000 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறு- குறு விவசாயி களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஏழைக் குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்குவதுடன் தலா ரூ.5000 உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கருப்பு கொடி போராட்டம் நடை பெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் மூன்று லட்சம் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஆணைமலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, ஜவ்வாதுமலை, கொடைக்கானல், நீலகிரி, குத்தியா லத்தூர், சித்தேரி ஆகிய மலைகளில் வாழும் மலைவாழ் மக்களும், சம வெளிப்பகுதியில் திருவள்ளூர், திரு வண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரு ளர், வேட்டைக்காரன், கொண்டா ரெட்டி ஆகிய பழங்குடியின மக்களும் தங்கள் இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றி பங்கேற்றுள்ளனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான கரும்பு விவ சாயிகள் இப்போராட்டத்தில் பங் கேற்றுள்ளனர்.

மத்திய- மாநில அரசுகள் விவ சாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு கோரிக்கைகளை நிறை வேற்ற முன்வர வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.