கடந்த பத்து ஆண்டுகளில் 8 மாநிலங்களில் உள்ள வங்கிகளை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ராஜஸ்தான் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கரோலி கிராமத்தில் வசித்து வந்த கஜ்ராஜ் குமார் சந்தேகத்தின் பேரில் ஹரியானா மற்றும் தமிழக காவல்துறையில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாவார். ராஜஸ்தானில் உள்ள வங்கிகள் மற்றும் கூரியர் அலுவலகங்களின் லாக்கரில் இருந்து விலைமதிப்பற்ற பொருள்களை திருடியதாக அவர் மீது காவல்துறையினர் கூறிவந்தனர். அவர், சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்ததால், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால் கொள்ளை கும்பலுடன் சேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில், கஜ்ராஜ் கிராமத்தில் ஒரு குற்றவாளியைச் சந்தித்துள்ளார். அவர்கள் கடனை அடைக்க உதவியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்த ஒரு உள்ளூர் வங்கியை கொள்ளையடிக்க ஒரு கும்பலை உருவாக்கினார்கள். சூதாட்டத்தில், ஒரே மாதத்தில், 80 ஆயிரத்தை இழந்துள்ளார் கஜ்ராஜ் . மேலும், நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளிலும் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்துள்ளார்.
இந்த நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் அவரை ஜெய்ப்பூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் ஒரு வங்கியை கொள்ளையடித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் இருந்து ஜெய்ப்பூர் வந்துள்ளனர் என காவல்துறையினர் கூறியுள்ளனர். விசாரணையில், குற்றவாளி கஜ்ராஜ் அவரது மூன்று உதவியாளர்களுடன் தங்கம் மற்றும் 10 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது கிராமத்தில் ஒரு வங்கியை குறிவைத்து வங்கியின் சுவரை உடைத்துள்ளார். உள்ளே வலுவான அறைக்குள் நுழைய முடியவில்லை. நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெறுப்புடன் வெளியேறியதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ராஜஸ்தானில் கொள்ளை முயற்சித்ததற்காக 2011 ஆம் ஆண்டில் அவர் முதன்முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இமாச்சலப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு வருடம் உனா சிறையில் அடைக்கப்பட்டார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஜ்ராஜ் குமார் திங்களன்று கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.