tamilnadu

img

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இருந்து ரூ.6 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இருந்து ரூ.6 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் தேசிய கருவூலத்தின் வருவாயை அதிகரிக்க, இது போன்ற ஏலம் முக்கிய பங்கு வகித்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகளால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சந்தை மதிப்பையும், சம்பாத்தியத்தையும் பாதுகாத்து கொள்வதே போராடி வருகின்றனர். ஆக, இந்த ஏலம் மற்ற நிறுவனங்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் பல அதிர்வெண் பேண்ட்களில், 8,600 மெகா ஹெர்ட்ஸ் தொலைத்தொடர்பு காற்றலைகளை ஏலத்தில் விட மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடி வருவாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 5ஜி சேவையை, கிராமப்புறங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்துக்கு, தொலைத்தொடர்பு ஆணையமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.