tamilnadu

img

மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு - 5 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதில், பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் சுஜாப்பூர் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்து காரணமாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;